Monday, August 11, 2008

அன்புள்ள சமத்துவ மக்கள் கட்சி தலைவருக்கு...

        எதித்த வீட்டு கோவாலு எங்கிட்ட என்னடா உங்க தலைவரு "சமத்துவ மக்கள் கட்சி" னு ஆரம்பிச்சுட்டார் ஏற்கனவே இருந்த திமுக , எட்டிபாத்த ஆதிமுக எல்லாம் என்ன ஆச்சுன்னு கேட்டான்.
        அப்போதான் இந்த மரமண்டை யோசிக்க ஆரம்பிச்சுது. ஒருவேளை நாடார் கட்சினா வேற சாதிசனம் ஓட்டு போடதுனு தலை நினைச்சுதானு.......
        அப்போ கோவாலு திரும்பவும் உள்ள புகுந்து "ஏன்டா வேற சதிசனத்தை சொல்ற நம்ம நாடக்கமாரே ஒட்டு போட மாட்டாங்களே...ஏற்கனவே திருநெல்வேலில ஆப்பு வைச்சங்கள"
அதுக்குள்ளே மறந்திட்டியானு கேட்டான் .
        அதுக்கு நா தலைவரு எவ்வளவோ பண்ணிருக்கார் ... மெர்கண்டைல் பேங்க் பேரணி வந்தார்னு சொன்னேன். உடனே "நானும்தான் வந்தேன் அவர் அப்பரம் என்ன பண்ணினாரு "ணு குறுக்க அருவாளை போட்டான். அவன்சொல்றதும் நெசந்தானே....
        நானும் விடாம சரி அதை விடு பெருந்தலைவருக்கு மணிமண்டபம் கட்டுராரேனு சொன்ன்னேன். அவன் அதுக்கு மண்டபம் அடிகல்லோட நிக்கி... காவேரி தமிழ்நாட்டுக்கு வந்தாலும் வரும் மண்டபம் முடியாதுன்னு சொல்லறான். ஏன்னு கேட்டா முந்தி தலைவர்கிட்ட நாடார் முத்திரை இருந்தது , இப்போ தான் சமத்துவ தலைவராகிட்டாரே... பெருந்தலைவருக்கு கட்டினா வரிசையா அண்ணலுக்கும், பசும்பொன்னுக்கும் கட்டணுமே னு யோசிப்பாரேனு.... இப்போஎல்லாம் கோவாலும் புத்திசாலி ஆகிட்டான்.

        என்னடா எது சொன்னாலும் விட மாட்டேன்குரானேனு நானும் யோசிச்சு " இது நாள் வரைக்கும் தலைவரு நாடார் சமுதாயத்துக்கு தானே மொங்கான் போட்டாரு .. நாட்டுல இன்னும் நெறைய சமுதாயம் இருக்குல அதையும் விடக்கொடதுனு நினைசிருப்பர்போலனு" சொல்லி திரும்பி பாத்தா ஆளையே காணோம் சிட்லு மாதிரி பரந்திட்டான்...

        பனையேரியா கொக்கா..... என்ன தலைவரே நான் சொல்றது சரிதானே ?....




4 comments:

Anonymous said...

நாடார் சமூகம் வாழ்க..
ஏலேய்! பதனி காச்சுரத விட்டுட்டு பதிவு எழுதிகிட்டு இருக்க...
தொழில பாரும்ள .....

Anonymous said...

annachi,unga blog enga virudhunagar bajar market velaiya madhiri pattaya kelapudhu.

Anonymous said...

Correct than

E-Farmers said...

ayya, hitech panaiyeri,, namakku ooru thekkannu theriyuthu.. Ooru pera solrathu..

Kandippa, neenga ippo panaiyeruthu illennu theriyuthu.. Athan ooruu poora, panai maram olai kooda vettama kedakkuthe..

Nadar nnu adayalathukku easya panayeri nnu vachu kitteenga.. Anna oorle entha payakittayavathu ippadi sonna, thalaiya seeviduvan, palaiya seevura mathiri..

Anyway, Looks like you are an interesting personality.. Keep up your contribution to the web community..

Take care
Thinakar