Wednesday, March 4, 2009

போன நாலு மாசமா தமிழ்நாட்டுல என்ன நடந்துச்சி

வீட்டுக்குள்ள வந்ததுமே .... அண்ணாச்சி அண்ணாச்சி நு அலறி அடிச்சு கோவாலு வந்தான் ...
என்னடா கோவாலு எப்படி இருக்கானு கேட்டதும் .. என்ன அண்ணாச்சி நீங்க இல்லாத போது என்னனவோ நடந்துட்டு ..நெறைய பேச இருக்கு ..நு இழுத்தான் ..

அதுக்கு நான் அப்படி என்ன நடத்து போச்சு போன 4 மாசமா ?

திருமங்கலத்துல தி மு க தோத்துசா?
கலைஞர் அன்பழகனை முதல்வராகிட்டாரா ?
ஈழ பிரச்சினைல பா மா கா மந்திரி பதவிய ராஜினாமா பண்ணிச்சா?
தி மு க சொல்லி காங்கிரஸ் இலங்கைல போர் நிறுத்தம் பண்ணிச்சா ?
ராஜபக்சே பிரபாகரன பிடிச்சிட்டாரா ?
அம்மாதான் தனி ஈழத்தை ஆதரிசுட்டங்களா?
வைகோ தான் ஜெயிலுக்கே போகாம 100 நாள் இருந்து சாதனை பண்ணிட்டாரா ?
கேப்டன் தான் பாகிஸ்தான் போய் மும்பை தீவிரவாத கும்பலை பிடிசிட்டாரா?

இல்ல உனக்கு தான் கள் இறக்க லைசென்சு கொடுத்துட்டாங்களா?..

என்ன தான் நடந்துச்சு ?
திருமங்கலத்துல கேப்டனும் நாட்டாமையும் டிபாசிட் இழந்தது தான் மிச்சம்
கலைஞருக்கு குடும்பம் ஒற்றுமையாகி கண்கள் பனித்து இதயம் இனித்து இருக்கு .
ராமதாசு தினம் ஒரு பல்டி அடிச்சு எக்ஸ்ட்ரா சீட்டுக்கு அடி போடுறார் ..
தங்க பாலு வாய தொறந்தாலே ஒரே காமெடி அறிக்கை தான் வருது .
அம்மாவுக்கு தி மு க இல்லனா கலைஞர தாக்கி அறிக்கை கொடுக்காட்டி தூக்கமே வர மாட்டேங்குது.
வைகோ வுக்கு என்ன பண்றோம் என்ன பண்ணனும்னே தெரியல .
இலங்கைல செத்துட்டு இருக்கிற தமிழனுக்காக இங்க உள்ள தமிழனும் சாகுறான் ..

இதுல என்னடா புதுசா நடந்துருக்கு .. பேசுறதுக்கே ஒன்னும் இல்ல....

இல்ல அண்ணாச்சி ...எலச்சன் தேதி சொல்லியாச்சு ..இப்போ கூட்டணி சூடு பறக்கும் ..
படிச்சவங்க நீங்க ..கொஞ்சம் விளக்கமா கூட்டணி கணக்கு சொல்லுவீங்கன்னு பாத்தா..

படிச்சவங்க எல்லாம் படிச்ச தொழிலையா பாக்காங்க ...
தமிழ்நாட்டுல வக்கீலுக்கு படிக்கிறவனும் சரி ..படிச்சு முடிச்சவனும் தொழில மாத்திட்டாங்க போல ..

இப்போ தான தேதி அறிவிச்சுருக்கு ... அடுத்த வாரம் பாப்போம். யாரெல்லாம் கூடு விட்டு கூடு தாவுராங்கனு ... போ போய் வேலைய பாரு ...

இத சொல்றதுக்கு நீங்க வராமலே இருந்துருக்கலாம் ...
என் கண்கள் பனித்து இதயம் இனித்தாவது இருந்திருக்கும் ..நு மொனகிட்டே வெளியே நடக்கலானான் ...