Sunday, October 5, 2008

கலைஞரின் தந்தியும் தண்ணியும் ...

அண்ணாச்சி அண்ணாச்சி ஒரு தந்தி கொடுக்கணும்னு அலறிக்கொண்டே உள்ளே வந்தான் கோவாலு ..என்னடா யாரவது போய்ட்டாங்களானு கேட்டா இல்ல தலைவருதான் தமிழர்கள் இனபடுகொலை செய்யப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த பிரதமர் தலையிட வேண்டும்ன்னு தந்தி கொடுக்க சொன்னாருன்னான் ...

உங்க தலைவரு வழக்கமா கடுதாசி தான போடுவாரு ...ஏன் இந்த தடவ உன்னை தந்தி அடிக்க சொல்லி இருக்காரு ...நாட்டுல இன்லான்ட் லெட்டரு ஸ்டாக் இல்லையானு கேட்டேன் ...போங்கண்ணாச்சி உங்களுக்கு எப்பவுமே புளி ஜோக்கு சொல்லறதே வேலையாப்போச்சி..அங்க ஆர்மி க்காறான் தமிழர் மேல குண்டுபோடுறான் ..நீங்க என்னனானு...

அடேய் நாட்டை உடைச்சி தனி நாடு கேட்டா குண்டு போடாம குண்டூசியா போடுவான் ...இதெல்லாம் புளிக்கதை இல்லை புலிக்கதை... அங்க தமிழன் தனி நாடு கேட்டு போராடுறான்..இங்க அத அரசிய்ல் ஆக்கி ஆதாரம் தேடுறான் ....பாண்டியன் என்னனா திமுகாவ கூப்பிடாம தனியா மத்த கட்சிகளோட சேந்து போராட்டம்னு சொன்னார் ..கலைஞர் தனியா மாங்கொல்லைல போட்டி கூட்டம் போட்டார் ... இதுவும் உருப்படியா நடக்கல.. அதுலயும் அம்மாவும் ஐயாவும் கலந்துக்காம எஸ்கேப் ஆகிட்டாங்க ....காங்கிரசஸ் என்னனா புலி புலினே..புலி காட்டிட்டு இருக்காங்க ....

அண்ணாச்சி நீங்க ஏன் புலியையும் , தமிழர்களையும் சேத்து கொழப்புறீங்க ..னு கேட்டான் ....

ஏண்டா அப்பாவி தமிழன் தனி ஈழம் வேணும்னு கனவு காண்கிறான் ..அதுக்காக புலிகள் ஆயுதம் ஏந்தி போராடுறான் ..போராடுற புலியும் தமிழன் தானே ..அமெரிக்காகாரன் இல்லையே ...புலி வேண்டானா நீபோயா தனி ஈழம் வாங்கி கொடுக்கப்போர..தமிழ் ஈழம் என்ன ஒருரூவா அரிசியா அவ்வளவு ஈஸியா கிடைக்க ..ஆட்ட அடிச்சாதான் பிரியாணி செய்யமுடியும்னா ..அடிக்க கசாப்பு காரன் வேண்டும் ...கசாப்பு காரனும் வேண்டாம்னா ..ஆட்டை யாரு அடிக்க எப்போ பிரியாணி சாப்பிட ... அமைதி பேச்சுவார்த்தை நடத்துகி ரவனே புலி கிட்டதான் பேசுறான்.. என்னை பொறுத்தவரை ஈழத் தமிழனும் புலியும் வேறு வேறு கிடையாது .. புலியை வேண்டாம்னு சொல்றவங்க எல்லாம் தனி ஈழம் வேண்டாம்னு சொல்ராங்கனுதான் அர்த்தம் ..

புலிங்க தான் நம்ம ராஜிவ் காந்திய கொன்னவங்களாச்சே..னு இழுத்தான் ...

இன்னும் எத்தனை வருசங்களுக்கு தான் இதையே பேசுவீங்க...காந்திய கொன்ன கதையையும் மறந்துடீங்க ..ஆர் எஸ் எஸ் இருக்கு ... இந்திராவ கொன்னதுக்காக சீக்கியர்களைஎல்லாம் ஒதுக்கியா வச்சீங்க ..இப்போ பிரதமரா இல்லையா ...தமிழனுக்கு மட்டும் ஏண்டா ஓர வஞ்சனை ...சண்டைக்காரன் அமெரிக்கா கூடயே கொஞ்சி குலவும் போது நம்ம சகோதரனை ஏன் ஒதுக்கி வைக்கணும் ...னு கேட்டா ..

அப்போ நீங்க புலிக்கு சப்போர்ட் பண்ரீங்களானு கேட்டான் ..

அடேய் நான் ஒண்ணும் புலிக்கும் சப்போர்ட் பண்ணலை பூனைக்கும் சப்போர்ட் பண்ணலை..உள்ளதை சொல்றேன் ...இதெல்லாம் நாம தொடங்கி வச்ச ஆட்டம் ..பாதில கழண்டு வந்தா இப்படித்தான் .புலிக்கும் ராஜிவ்க்கும் என்ன சொத்து தகராறா ... ஏதோ ஒரு வேகத்துல நடந்து போச்சு ..நடந்த விசயத்துக்கு இப்போ புலிகளும் வருத்தப்படத்தான் செய்வாங்க .. இப்போ என்ன புலியா நம்ம நாட்டுல குண்டு வைக்கிறான் ... .நாம தான் முடிச்சு வைக்கணும் ..அதை விட்டுட்டு அரசியலாக்கி ஆதாயம் தேடக்கூடாது ....

அப்போ என்னதான் சொல்றீங்க ...இப்போ நான் தந்தி அடிக்கணுமா வேண்டாமா ?

நீ தந்தியும் அடி ..தண்ணியும் அடி நான் ஒண்ணும் சொல்லலை ....நான் என் மனசுக்கு பட்டதை சொன்னேன் னு சொன்னா...

நல்ல ஐடியா கொடுத்தீங்க ...நான் போய் முதல்ல டாஸ்மார்க்ல தண்ணி அடிக்கிறேன் அப்பரம் போய் தந்தி அடிக்கிறேன்னு கிளம்பிட்டான் ...